×

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சிக்குட்பட்ட நாகலுடையானிருப்பு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் குளிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் ஊராட்சிக்கு சொந்தமான திருவாசல் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளம் முழுவதும் வெங்காய தாமரை செடிகள் சூழ்ந்து, அழுகிய துர்நாற்றம் வீசி மக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த ஊராட்சி தலைவர் வீரசேகரன், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வெங்காயத்தாமரை முழுமையும் அகற்றப்பட்டு, மீண்டும் குளம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் வெங்காயத் தாமரை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது….

The post திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruthurapoondi ,Tiruthurapoondi ,Nagaludayaniripu ,Adirengam panchayat ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...